All about Paleo Diet

Post Top Ad

Tuesday 14 February 2017

ஆட்டோ இம்யூன் வியாதிகளும் கொழுப்பும்

ஆட்டோ இம்யூன் வியாதிகளும் கொழுப்பும்

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

ரியுமடாய்ட் ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாத நோய்

இந்தியாவில் சுமார் சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டு வாத நோயால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த மூட்டு வாத நோய் ஆட்டோ இம்யூன் வியாதிகளுள் மிக முக்கிய இடத்தில் இருப்பதற்கு காரணம்,
இந்த நோய் தரும் வலியும் அதனால் ஏற்படும் இயல்பு வாழ்க்கை முடக்கமும் தான் .

இத்தகைய கொடிய ஒரு நோய்
நம்மிடையே முன்னிலும் அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.

காரணம் ???

சூழலியல் மாற்றம்(environmental changes)
மரபு வழியாக வருகிறது ( hereditary )ஆகிய இரு காரணங்கள் கூறப்படுகிறது.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த இரு காரணங்களையும் தான்.

மனித இனம் தோன்றிய 26 லட்சம் வருடங்களில் இல்லாத ஜீன் எனும் மரபணு மாற்றங்கள் கடந்த 10,000 வருடங்களாக ஏற்பட்டு, அதுவும் கடந்த 100 ஆண்டுகளாக மிக வேகமாக ஏற்படுவதற்கு காரணம் என்ன???

சூழலியல் மாற்றம் என்றால் என்ன??

சூழலியலில் நாம் செய்த மிகப்பெரிய மாற்றங்களில்

நாம் தினமும் மூன்று வேலை உண்ணும் உணவு தான் முக்கிய இடம் வகிக்கிறது.

ஆக, தேவையற்ற முறையில் உணவு முறைகளை  மாற்றி நாம் தான் உறங்கிக்கொண்டிருந்த கெட்ட ஜீன்களை எழுப்பிவிட்டோம்.

அதன் பலனை இப்போது அறுவடை செய்கிறோம்.

மூட்டு வாத நோய் என்பது நமது மூட்டுகள் அனைத்தையும் ஒன்றாக தாக்கி இன்ப்லமேசனை ஏற்படுத்தி முடக்கிவிடும் நோயாகும்.

Arthritis என்றால் மூட்டுகளில் ஏற்படும் இன்ப்லமேசன் ஆகும்.

இந்த இன்ப்லமேசன் ஏன் ஏற்படுகிறது??

வரலாற்றில் எங்கேனும் ஒரு சூழலிலாவது "ட்ரேன்ஸ் ஃபேட்" (transfat) எனும் கொடிய நஞ்சை நமது முன்னோர்கள் உண்டார்கள் என்ற சான்று உள்ளதா??

ட்ரேன்ஸ் ஃபேட் என்றால் என்ன??

நாம் உண்ணும் ஒவ்வொரு பொறித்த உணவிலும் இருப்பது இந்த ட்ரேன்ஸ் ஃபேட் தான் . இவை நமக்கு செய்யும் ஊறுகள் ஒன்றல்ல இரண்டல்ல.

எண்ணெயின் கொதிக்கும் திறனை அதிகரிக்க , அவைகளின் மீது "ஹைட்ரஜனேற்றம்"(hydrogenation) எனும் வேதியியல் மாற்றம் செய்து நல்ல கொழுப்பை "ட்ரான்ஸ் ஃபேட்" ஆக மாற்றிவிட்டோம்.

இந்த ட்ரேன்ஸ் ஃபேட் நமது குடலில் பங்கத்தை ஏற்படுத்துகிறது.
இது "leaky gut syndrome" எனும் பிரச்சனையை வரவழைக்கிறது.

பாதிப்புக்குள்ளான குடலில் நாம் உண்ணும் உணவில் இருந்து உட்கொள்ளப்படும் அனைத்து சத்துகளும் ரத்தத்தில் கலக்கும்.

பொதுவாக , நல்ல நிலையில் இருக்கும் குடலுக்கு , தேவையான சத்துகளை மட்டும் உறிஞ்சி தேவையற்ற சத்துகளை வெளியேற்றும் சக்தி உண்டு.

ஆனால் லீக்கி கட் பிரச்சனை இருக்கும் குடலுக்கு , எதை உட்கொண்டு எதை விட வேண்டும் என்று தெரியாது. ஆக, அனைத்து சத்துகளையும் ரத்தத்தில் கலக்க விடும்.

இதனால், நமது எதிர்ப்பு சக்தியானது தடம்புரண்டு, நமது மூட்டுகளை அழிக்கும்.

மேலும் , தானியங்களை பிரதானமாக உண்ணும் ஒருவருக்கு

உடலில் பல இடங்களில் இன்ஃப்லமேசன் தோன்ற வாய்ப்புண்டு.

காரணம்.

மாவுச்சத்தை பிரதான எரிபொருளாக நமது செல்கள் உட்கொள்ளும்போது ,
நமது செல்களில் "free radicals" எனும் கழிவுகள் தோன்றும்.

இந்த free radicals நமது உடலுக்கு பங்கம் விளைவிக்கக்கூடியவை.

எனவே, காலை மதியம் இரவு மூன்று வேலையும் இட்லி தோசை சாதம் என்று உண்டால் அது மேலும் மூட்டு வாதத்தை அதிகப்படுத்தும்.

பொதுவாக , ஒருவருக்கு மூட்டு வாதம் இருப்பது ,

அவர்கள் கூறும் நோய் அறிகுறிகளை வைத்தே மூட்டு வாதம் வந்ததை அறியலாம்

கணுக்கை, விரல்கள்,முழங்கை, முழங்கால் என்று அனைத்து மூட்டுகளிலும் புண் ஏற்பட்டு வலி தரும்.

ரத்த பரிசோதனை செய்தால்,
ரியுமடாய்ட் ஃபேக்டர் எனும் காரணி இருக்கலாம்.

நோயின் ஆரம்பத்தில், ரத்தத்தில் தென்படாமல் போகப்போக தென்படலாம்.

Erythrocyte sedementation rate எனும் ரத்த சிவப்பணுக்கள் படியும் தன்மை மிக அதிகமாகும்.

C-reactive proteins எனும் இன்ப்லமேசனை குறிக்கும் காரணி மிக மிக அதிகமாக இருக்கும்

ஆண்ட்டி நியூக்ளியர் ஆண்டிபாடிகளும் ரத்தத்தில் அதிகம் இருக்கலாம்.

இத்தகைய மூட்டு வாதத்திற்கு , தற்போது இருக்கும் சிகிச்சைகள்

மூட்டு வலியை குணப்படுத்தும் வலி நிவாரணிகள் மற்றும் நோயின் தன்மையை மாற்றும் மருந்துகள் என்று அழைக்கப்படும் disease modifying anti rheumatoid drugs (DMARDs) கொடுக்கப்படும்.

இவை மூட்டு வாதத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

ஒருவர் மூட்டுவாதத்திற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு கூட உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் மூட்டு வாதம் தரும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்

மூட்டு வாதம் இருப்பவர்கள்

1. தானியங்கள், சிறு தானியங்களை தவிர்க்க வேண்டும்

2. க்ளூடன் கொண்ட கோதுமையை அறவே ஒதுக்க வேண்டும்.

3. முடிந்தவரை இயற்கை வழியில் விளைந்த ஆர்கானிக் காய்கறிகளை உண்ணலாம் .

4. நாட்டுக்கோழி கறி, புல் மேய்ந்த ஆட்டு கறி , ஈரல் , ஆட்டுகால் சூப் போன்றவற்றை உண்ண வேண்டும்

5. பசு மஞ்சள், மிளகு, துளசி , பூண்டு, சிறு வெங்காயம் போன்றவற்றை சேர்த்தால் இன்ப்லமேசன் குறையும்

6. பாமாயில், சஃபோலா , சன் பிளவர் ஆயில், வனஸ்பதி போன்ற செயற்கை எண்ணெய்களை நிறுத்த வேண்டும் .

7. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

8. எண்ணெயில் தீக்குளித்த உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்.

இத்தகைய மாற்றங்களை உணவில் செய்வதன் மூலம்
மூட்டு வாதத்தின் தீவிரத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Dr.farook Abdulla

No comments:

Post a Comment