All about Paleo Diet

Post Top Ad

Sunday 12 February 2017

பேலியோ பற்றி மக்களின் தவறான அணுகுமுறை...

புத்தகக் கண்காட்சி புண்ணியத்தில் திருப்பூர் வாசியாக ஒருவாரம் ஓடிவிட்டது. தொடர்சியாக இங்கே மக்களைச் சந்தித்ததில் பல மகிழ்ச்சியைத் தரக்கூடிய பல செய்திகளையும், மிகவும்  கவலை தரும் செய்திகளையும் கேட்டேன் / கேட்டுக்கொண்டிருக்கிறேன். மீண்டும் அவற்றினை அனைத்து குழு மக்களுக்கும் அறிவிப்பது என் கடமை.

முதலில் மகிழ்வைத் தரும் செய்திகளில் சில:

குடும்ப சகிதமாக பல மக்களைச் சந்தித்தேன். அதில் பலர் ஏதோ ஒரு காரணம் குடியின் பிடியில் விழுந்து மீள முடியாமல் சிக்கலாக்கிக் கொண்ட வாழ்க்கையிலிருந்து பேலியோ மூலம் சுலபமாக மீண்டிருக்கிறார்கள். குடியிலிருந்து மீண்டவரை விட அவரின் குடும்பத்தினரின் மகிழ்ச்சி சொல்லில் வடிக்க முடியாது. தெளிவாக ரத்தப் பரிசோதனை செய்து, குழுவில் போட்டு உணவு அட்டவணை பெற்று சரியான ஆரோக்கியத்தை அடைந்திருக்கிறார்கள்.

வெகு இளம் வயதில் ஒரு பெண்மணி கிட்டத்தட்ட 400 சொச்சம் இருந்த தன் சர்க்கரை அளவை பேலியோவுக்கான ரத்தப் பரிசோதனை முடிவில் அறிந்துகொண்டு சரியாக உணவினை எடுத்து இன்றைக்கு HbA1C 10 லிருந்து 5 க்கு கொண்டுவந்திருக்கிறார். நல்ல எடை குறைத்து ஆரோக்கியம் மீண்டிருக்கிறார். இந்தப் பரிசோதனை செய்யாவிட்டால் தனக்கு சுகர் இருப்பதே அறியாது பெரும் சிக்கலில் மாட்டி இருப்பேன் என்று அவர் கூறியதும், தெளிவாக இந்த உணவுமுறையை அவர் பின்பற்றுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. பலருக்கு சொல்வதறியாது கை குலுக்கி நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துச் சென்றார்கள். இதில் குழு சார்பில் நாங்கள் பெருமையடையவோ, கிரீடம் சுமக்கவோ ஒன்றுமே இல்லை என்பதோடு, இது போன்று ஆயிரக்கணக்கில் பார்த்தபடியால் நன்றி சொல்லி கை கூப்பிக் கடக்க முடிந்தது. பேலியோவின் வெற்றிக்கு நாங்கள் சப்போர்ட் மட்டுமே அனைத்து ரிசல்ட்களுக்கும் காரணம் உங்களின் கடுமையான, கட்டுப்பாடான உணவுப்பழக்கமும், அர்ப்பணிப்பும்தான். நாங்கள் வெறும் கருவியே. எக்காலத்திலும் பேலியோ மட்டுமே கதாநாயகன்.

இனி கவலை தரும் விஷயங்கள்:

ஏற்கனவே இதைப்பற்றி நான் சொல்லி இருந்தாலும், இன்னும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

திருப்பூர், கோவை, ஈரோடு பகுதி மக்களில் பலர் வாட்ஸப், தெரிந்தவர் சொன்னார் என்ற அளவிலே திலகவதி மதனகோபால் அவர்கள் சொன்னது போல ஒரு பேஷனான பேலியோவை அணுகுகிறார்கள். சொந்த உடல்நலனின் ஆரோக்கியத்திற்கு சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாமல் போலி பேலியோ கன்சல்ட்களிடம் காசைக் கொட்டி கறியும் பாதாமும் சாப்பிட்டு ரத்தப் பரிசோதனை கூட எடுக்காமல் உடலைக் கெடுத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக ஈரோட்டிலிருந்து வந்த மக்களிடம் இதை அதிகம் பார்த்தேன். பேலியோ கன்சல்டிங்கில் காசு பார்த்த சில அல்பங்கள் ரத்தப் பரிசோதனைக்கு ஆகும் சொற்ப பணத்தையும் பாதாம் விற்றுப் பிழைத்து மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இத்தனைக்கும் மக்கள் இவர்களிடம் அதிக கட்டணம் கொடுத்து தவறான அறிவுரைகளைப் பெறுகிறார்கள். காலை இறைச்சி, மதியம் பாதாம், இரவு இறைச்சி அல்லது முட்டை இவ்வளவுதான் ஈரோடு, திருப்பூர், கோவை போலி கட்டணப் பேலியோ அட்வைஸ் கும்பலின் பேலியோ அறிவுரைகள். எனவே ரத்தப் பரிசோதனை செய்யாமல் காசு கொடுத்து உடலை வீணாக்கிக்கொள்ள விழையும் அன்பர்கள் மேற்கூறியபடி உண்டு இலவசமாக உடலைப் புண்ணாக்கிக்கொள்ளும்படி ஆழ்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

40 வருடம் தண்ணியடித்து, தம் அடித்து, குப்பை உணவுகள் உண்டு, இதைப் போன்ற பதர்களிடம் காசு கொடுத்து மூன்று வேளையும் கறியும் முட்டையும் தின்றால் உங்களுக்கு சாதாரண மனிதர்களை விட வியாதிகள் அதிகம் வரும்.

ஆக, நாம் குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டுமே. பேலியோ துவங்குவதற்கு முன் குழுவில் பரிந்துரைக்கும் முழு ரத்தப் பரிசோதனை அவசியம். அதில் இருக்கும் சிக்கல்களின் அடிப்படையில் ஒருவருக்கு பேலியோ ஒத்துவருமா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவரும். அதன்படி உங்களுக்கேற்ற பேலியோ உணவுகளோ அல்லது மருத்துவரைப் பார்க்கவேண்டிய அறிவுரைகளோ கிடைக்கும். இதற்கான வழிகள் இரண்டு.

01. ஆரோக்கியம் நல்வாழ்வு குழு மூலம் இலவசமாக சேவையைப் பெற்றுக்கொள்வது.
02. பேலியோ பற்றி அறிந்த மருத்துவரை அணுகி அவர் கேட்கும் கட்டணம் கொடுத்து அவர் அறிவுரைப்படி பேலியோவைத் தொடர்வது.

மேற்கூறிய இரண்டு தவிர்த்து நீங்கள் திடகாத்திரமான 18 வயதுக் காரராக இருந்தாலும், நோயுற்றவராக இருந்தாலும் பேலியோ பரிந்துரையை யார் செய்தாலும் புறக்கணியுங்கள். அவ்வாறு செய்ய முடியாது என்றால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பேலியோவைக் காரணமாகக் கூறவேண்டாம். அந்தப் பஞ்சாயத்தையும் எங்களிடம் கொண்டுவரவேண்டாம். அதை உங்களுக்குப் பரிந்துரைத்த அந்த போலிகளிடமே வைத்துக்கொள்ளவும். எங்களுக்கு இருக்கும் நேரத்தினை நாங்கள் சொல்வதுபடிக் கேட்டு பரிசோதனை செய்து ஒழுங்காக உணவெடுக்கும் மக்களுக்கு ஒதுக்கி சேவை செய்துவிட்டுப் போகிறோம்.

குழுவில் நியாண்டர் செல்வன் அவர்கள் துவங்கி நீங்கள் யாரிடம் நேரடியாக பேலியோ அறிவுரை வாங்கினாலும் உங்கள் ரிப்போர்ட்களை குழுவில் போட்டு டோக்கன் நம்பர் வாங்கிக்கொள்ளவும். டோக்கன் நம்பர் இல்லாமல் கேட்கப்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப் போவதில்லை. இனி கேள்வி கேட்கும்பொழுது உங்கள் டோக்கன் எண்ணையும் குறிப்பிட்டே கேள்வியோ, சந்தேகமோ கேட்கவும். அதற்கும் முன்பாக அதற்கான பதில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதா என்பதை குழுவில் உள்ள சர்ச் ஆப்ஷனைப் பயன்படுத்தி உறுதி செய்துகொள்ளவும். அது எப்படி என்று தெரியாவிட்டால் பேஸ்புக் தெரிந்த ஒருவரிடம் கற்றுக்கொள்ளவும். முடிந்தவரை குழுவை டெஸ்டாப்பிலோ, லாப்டாப்பிலோ திறந்து படிக்கவும். மொபைலில் பேஸ்புக்கின் பல வசதிகள் இருப்பதில்லை.

ஆக, கொங்கு மக்களுக்கும், வாட்ஸபை நம்பி பேலியோ எடுக்கும் மக்களுக்கும் நாங்கள் கேட்டுக்கொள்வது ஒன்றேதான். ஒரு சித்தாந்தத்தை முழுவதும் இலவசமாக திறந்த புத்தகமாகக் கொடுத்தும் அதைப் பற்றி அக்கறையுடன் படித்தறிய நேரமில்லாது போலிகளிடம் உங்கள் ஆரோக்கியத்தை அடகுவைக்க நீங்கள் துணிந்தால் அந்த முட்டாள்தனத்திற்கும், சோம்பேறித்தனத்திற்கும் குழுவும், பேலியோ உணவுமுறையும் எந்தவகையிலும் பொறுபேற்காது என்பதோடு உங்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். தவறுதலாக அறியாது நீங்கள் இந்தத் தவறைச் செய்திருப்பின் உடனடியாக அவர்களை ரத்தப் பரிசோதனை செய்து முறையான அறிவுரையைப் பெற்றுக்கொள்ள உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

தவறாகவும், ஏற்கனவே சுகருக்கு, பிபிக்கு மருந்து மாத்திரைகள் சரியாக எடுக்காமலும், தைராய்டு, சொரியாஸிஸ், ஸ்டென்ட், பைபாஸ் சர்ஜரி போன்ற சிகிச்சை எடுத்த பிரச்னை உடைய அன்பர்களும் குழு மூலமோ, மருத்துவ உதவி மூலமோ மட்டுமே பேலியோ முயற்சிக்கவேண்டும். ஆரோக்கியமாக இருப்பதாக நம்பும் சிக்ஸ் பேக் வைத்த அன்பராக இருந்தாலும் பேலியோவுக்கு முன் பின் ரத்தப் பரிசோதனைகள் அவசியம்.

பரிந்துரைக்கப்படும் உணவு, சப்ளிமென்ட்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் சரியாகப் பின்பற்றுவதும் அவசியம். குழு மற்றும் பேலியோ பற்றி அறிந்த மருத்துவர்கள் தவிர்த்து பேலியோவை வேறு யார் சொன்னாலும் அல்லது நீங்களே சுயமாகவும் முயற்சிக்கவேண்டாம். உங்கள் நலன் கருதி இதைச் சொல்கிறோம் என்பது தவிர்த்து இதில் வேறு எதுவும் இல்லை.

ரிப்போர்ட் போட்டால் க்ரூப்ல டயட் கிடைக்க மாசக்கணக்காகுங்க நம்ம கிட்ட வாங்க சார்ட் தர்றேன் என்பதுதான் இந்தப் போலிகளின் மிக முக்கிய தூண்டில் புத்தகக் கண்காட்சி புண்ணியத்தில் திருப்பூர் வாசியாக ஒருவாரம் ஓடிவிட்டது. தொடர்சியாக இங்கே மக்களைச் சந்தித்ததில் பல மகிழ்ச்சியைத் தரக்கூடிய பல செய்திகளையும், மிகவும்  கவலை தரும் செய்திகளையும் கேட்டேன் / கேட்டுக்கொண்டிருக்கிறேன். மீண்டும் அவற்றினை அனைத்து குழு மக்களுக்கும் அறிவிப்பது என் கடமை.

முதலில் மகிழ்வைத் தரும் செய்திகளில் சில:

குடும்ப சகிதமாக பல மக்களைச் சந்தித்தேன். அதில் பலர் ஏதோ ஒரு காரணம் குடியின் பிடியில் விழுந்து மீள முடியாமல் சிக்கலாக்கிக் கொண்ட வாழ்க்கையிலிருந்து பேலியோ மூலம் சுலபமாக மீண்டிருக்கிறார்கள். குடியிலிருந்து மீண்டவரை விட அவரின் குடும்பத்தினரின் மகிழ்ச்சி சொல்லில் வடிக்க முடியாது. தெளிவாக ரத்தப் பரிசோதனை செய்து, குழுவில் போட்டு உணவு அட்டவணை பெற்று சரியான ஆரோக்கியத்தை அடைந்திருக்கிறார்கள்.

வெகு இளம் வயதில் ஒரு பெண்மணி கிட்டத்தட்ட 400 சொச்சம் இருந்த தன் சர்க்கரை அளவை பேலியோவுக்கான ரத்தப் பரிசோதனை முடிவில் அறிந்துகொண்டு சரியாக உணவினை எடுத்து இன்றைக்கு HbA1C 10 லிருந்து 5 க்கு கொண்டுவந்திருக்கிறார். நல்ல எடை குறைத்து ஆரோக்கியம் மீண்டிருக்கிறார். இந்தப் பரிசோதனை செய்யாவிட்டால் தனக்கு சுகர் இருப்பதே அறியாது பெரும் சிக்கலில் மாட்டி இருப்பேன் என்று அவர் கூறியதும், தெளிவாக இந்த உணவுமுறையை அவர் பின்பற்றுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. பலருக்கு சொல்வதறியாது கை குலுக்கி நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துச் சென்றார்கள். இதில் குழு சார்பில் நாங்கள் பெருமையடையவோ, கிரீடம் சுமக்கவோ ஒன்றுமே இல்லை என்பதோடு, இது போன்று ஆயிரக்கணக்கில் பார்த்தபடியால் நன்றி சொல்லி கை கூப்பிக் கடக்க முடிந்தது. பேலியோவின் வெற்றிக்கு நாங்கள் சப்போர்ட் மட்டுமே அனைத்து ரிசல்ட்களுக்கும் காரணம் உங்களின் கடுமையான, கட்டுப்பாடான உணவுப்பழக்கமும், அர்ப்பணிப்பும்தான். நாங்கள் வெறும் கருவியே. எக்காலத்திலும் பேலியோ மட்டுமே கதாநாயகன்.

இனி கவலை தரும் விஷயங்கள்:

ஏற்கனவே இதைப்பற்றி நான் சொல்லி இருந்தாலும், இன்னும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

திருப்பூர், கோவை, ஈரோடு பகுதி மக்களில் பலர் வாட்ஸப், தெரிந்தவர் சொன்னார் என்ற அளவிலே திலகவதி மதனகோபால் அவர்கள் சொன்னது போல ஒரு பேஷனான பேலியோவை அணுகுகிறார்கள். சொந்த உடல்நலனின் ஆரோக்கியத்திற்கு சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாமல் போலி பேலியோ கன்சல்ட்களிடம் காசைக் கொட்டி கறியும் பாதாமும் சாப்பிட்டு ரத்தப் பரிசோதனை கூட எடுக்காமல் உடலைக் கெடுத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக ஈரோட்டிலிருந்து வந்த மக்களிடம் இதை அதிகம் பார்த்தேன். பேலியோ கன்சல்டிங்கில் காசு பார்த்த சில அல்பங்கள் ரத்தப் பரிசோதனைக்கு ஆகும் சொற்ப பணத்தையும் பாதாம் விற்றுப் பிழைத்து மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இத்தனைக்கும் மக்கள் இவர்களிடம் அதிக கட்டணம் கொடுத்து தவறான அறிவுரைகளைப் பெறுகிறார்கள். காலை இறைச்சி, மதியம் பாதாம், இரவு இறைச்சி அல்லது முட்டை இவ்வளவுதான் ஈரோடு, திருப்பூர், கோவை போலி கட்டணப் பேலியோ அட்வைஸ் கும்பலின் பேலியோ அறிவுரைகள். எனவே ரத்தப் பரிசோதனை செய்யாமல் காசு கொடுத்து உடலை வீணாக்கிக்கொள்ள விழையும் அன்பர்கள் மேற்கூறியபடி உண்டு இலவசமாக உடலைப் புண்ணாக்கிக்கொள்ளும்படி ஆழ்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

40 வருடம் தண்ணியடித்து, தம் அடித்து, குப்பை உணவுகள் உண்டு, இதைப் போன்ற பதர்களிடம் காசு கொடுத்து மூன்று வேளையும் கறியும் முட்டையும் தின்றால் உங்களுக்கு சாதாரண மனிதர்களை விட வியாதிகள் அதிகம் வரும்.

ஆக, நாம் குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டுமே. பேலியோ துவங்குவதற்கு முன் குழுவில் பரிந்துரைக்கும் முழு ரத்தப் பரிசோதனை அவசியம். அதில் இருக்கும் சிக்கல்களின் அடிப்படையில் ஒருவருக்கு பேலியோ ஒத்துவருமா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவரும். அதன்படி உங்களுக்கேற்ற பேலியோ உணவுகளோ அல்லது மருத்துவரைப் பார்க்கவேண்டிய அறிவுரைகளோ கிடைக்கும். இதற்கான வழிகள் இரண்டு.

01. ஆரோக்கியம் நல்வாழ்வு குழு மூலம் இலவசமாக சேவையைப் பெற்றுக்கொள்வது.
02. பேலியோ பற்றி அறிந்த மருத்துவரை அணுகி அவர் கேட்கும் கட்டணம் கொடுத்து அவர் அறிவுரைப்படி பேலியோவைத் தொடர்வது.

மேற்கூறிய இரண்டு தவிர்த்து நீங்கள் திடகாத்திரமான 18 வயதுக் காரராக இருந்தாலும், நோயுற்றவராக இருந்தாலும் பேலியோ பரிந்துரையை யார் செய்தாலும் புறக்கணியுங்கள். அவ்வாறு செய்ய முடியாது என்றால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பேலியோவைக் காரணமாகக் கூறவேண்டாம். அந்தப் பஞ்சாயத்தையும் எங்களிடம் கொண்டுவரவேண்டாம். அதை உங்களுக்குப் பரிந்துரைத்த அந்த போலிகளிடமே வைத்துக்கொள்ளவும். எங்களுக்கு இருக்கும் நேரத்தினை நாங்கள் சொல்வதுபடிக் கேட்டு பரிசோதனை செய்து ஒழுங்காக உணவெடுக்கும் மக்களுக்கு ஒதுக்கி சேவை செய்துவிட்டுப் போகிறோம்.

குழுவில் நியாண்டர் செல்வன் அவர்கள் துவங்கி நீங்கள் யாரிடம் நேரடியாக பேலியோ அறிவுரை வாங்கினாலும் உங்கள் ரிப்போர்ட்களை குழுவில் போட்டு டோக்கன் நம்பர் வாங்கிக்கொள்ளவும். டோக்கன் நம்பர் இல்லாமல் கேட்கப்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப் போவதில்லை. இனி கேள்வி கேட்கும்பொழுது உங்கள் டோக்கன் எண்ணையும் குறிப்பிட்டே கேள்வியோ, சந்தேகமோ கேட்கவும். அதற்கும் முன்பாக அதற்கான பதில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதா என்பதை குழுவில் உள்ள சர்ச் ஆப்ஷனைப் பயன்படுத்தி உறுதி செய்துகொள்ளவும். அது எப்படி என்று தெரியாவிட்டால் பேஸ்புக் தெரிந்த ஒருவரிடம் கற்றுக்கொள்ளவும். முடிந்தவரை குழுவை டெஸ்டாப்பிலோ, லாப்டாப்பிலோ திறந்து படிக்கவும். மொபைலில் பேஸ்புக்கின் பல வசதிகள் இருப்பதில்லை.

ஆக, கொங்கு மக்களுக்கும், வாட்ஸபை நம்பி பேலியோ எடுக்கும் மக்களுக்கும் நாங்கள் கேட்டுக்கொள்வது ஒன்றேதான். ஒரு சித்தாந்தத்தை முழுவதும் இலவசமாக திறந்த புத்தகமாகக் கொடுத்தும் அதைப் பற்றி அக்கறையுடன் படித்தறிய நேரமில்லாது போலிகளிடம் உங்கள் ஆரோக்கியத்தை அடகுவைக்க நீங்கள் துணிந்தால் அந்த முட்டாள்தனத்திற்கும், சோம்பேறித்தனத்திற்கும் குழுவும், பேலியோ உணவுமுறையும் எந்தவகையிலும் பொறுபேற்காது என்பதோடு உங்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். தவறுதலாக அறியாது நீங்கள் இந்தத் தவறைச் செய்திருப்பின் உடனடியாக அவர்களை ரத்தப் பரிசோதனை செய்து முறையான அறிவுரையைப் பெற்றுக்கொள்ள உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

தவறாகவும், ஏற்கனவே சுகருக்கு, பிபிக்கு மருந்து மாத்திரைகள் சரியாக எடுக்காமலும், தைராய்டு, சொரியாஸிஸ், ஸ்டென்ட், பைபாஸ் சர்ஜரி போன்ற சிகிச்சை எடுத்த பிரச்னை உடைய அன்பர்களும் குழு மூலமோ, மருத்துவ உதவி மூலமோ மட்டுமே பேலியோ முயற்சிக்கவேண்டும். ஆரோக்கியமாக இருப்பதாக நம்பும் சிக்ஸ் பேக் வைத்த அன்பராக இருந்தாலும் பேலியோவுக்கு முன் பின் ரத்தப் பரிசோதனைகள் அவசியம்.

பரிந்துரைக்கப்படும் உணவு, சப்ளிமென்ட்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் சரியாகப் பின்பற்றுவதும் அவசியம். குழு மற்றும் பேலியோ பற்றி அறிந்த மருத்துவர்கள் தவிர்த்து பேலியோவை வேறு யார் சொன்னாலும் அல்லது நீங்களே சுயமாகவும் முயற்சிக்கவேண்டாம். உங்கள் நலன் கருதி இதைச் சொல்கிறோம் என்பது தவிர்த்து இதில் வேறு எதுவும் இல்லை.

ரிப்போர்ட் போட்டால் க்ரூப்ல டயட் கிடைக்க மாசக்கணக்காகுங்க நம்ம கிட்ட வாங்க சார்ட் தர்றேன் என்பதுதான் இந்தப் போலிகளின் மிக முக்கிய தூண்டில் பார்முலா. அவ்வளவு பொறுமை இல்லாதவர்களுக்கும், ஒரு இன்டர்நெட் சென்டரில் 20 ரூபாய் கொடுத்து குழுவில் அப்லோட் செய்ய வசதி இல்லாதவர்களுக்கும் இந்த பார்முலா அருமையான ஆரோக்கிய அல்வாவைத் தரும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். உங்களுக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் ரத்தப்பரிசோதனை செய்து பேஸ்புக் பற்றி அறிந்த ஒருவரிடம் கொடுத்து உதவும்படிக் கேட்டாலே வேலை சுலபமாக முடிந்துவிடும். மூன்று நாட்களில் இதைப் பற்றி எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதும் கூடுதல் தகவல்.

இதனை காப்பி பேஸ்ட் செய்து வாட்ஸப்பில் ஷேர் செய்து பரவலாக மக்களை சென்றடைய உதவுங்கள்.

நன்றி.. அவ்வளவு பொறுமை இல்லாதவர்களுக்கும், ஒரு இன்டர்நெட் சென்டரில் 20 ரூபாய் கொடுத்து குழுவில் அப்லோட் செய்ய வசதி இல்லாதவர்களுக்கும் இந்த பார்முலா அருமையான ஆரோக்கிய அல்வாவைத் தரும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். உங்களுக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் ரத்தப்பரிசோதனை செய்து பேஸ்புக் பற்றி அறிந்த ஒருவரிடம் கொடுத்து உதவும்படிக் கேட்டாலே வேலை சுலபமாக முடிந்துவிடும். மூன்று நாட்களில் இதைப் பற்றி எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதும் கூடுதல் தகவல்.

இதனை காப்பி பேஸ்ட் செய்து வாட்ஸப்பில் ஷேர் செய்து பரவலாக மக்களை சென்றடைய உதவுங்கள்.

நன்றி.
திண்டுக்கல் சிவ குமரனின் வாட்சப் பதிவு.


No comments:

Post a Comment